fbpx

மீண்டும் கோரத்தாண்டவம்..!! புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் ஒருவர் பலி..!! பீதியில் பொதுமக்கள்..!!

இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் 4 பேருக்கு இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அந்த 4 பேரும் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் என வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வீரியம் குறைந்தது எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல், சலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் எனவும், கொரோனாவின் போது அளிக்கப்பட்ட அதே முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் கை கழுதல், மாஸ்க் அணிதல், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகரை சேர்ந்த 55 வயது நபர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தார். கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். உயிரிழந்த கூலித் தொழிலாளி கோவிந்துக்கு பல்வேறு இணை நோய்கள் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Chella

Next Post

75 வயது மூதாட்டியை கதறவிட்ட காமக்கொடூரன்..!! நேரில் பார்த்த மகள்..!! உயிருக்கு போராட்டம்..!!

Wed Dec 27 , 2023
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி காலனி பகுதியில் வசித்து வந்தவர் ராமர் மனைவி பேச்சியம்மாள் (75). இவர் தனது மகள் மகாலட்சுமியுடன் வசித்து வந்தார். மகள் மகாலட்சுமி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல மகாலட்சுமி வேலைக்கு சென்று விட்டு இரவு சுமார் 7.30 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பேச்சியம்மாளை அதே பகுதியைச் […]

You May Like