fbpx

சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் எவ்வளவு அபராதம்..? இன்று மாலை முக்கிய முடிவு…

சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் அணியாவிட்டால் எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது தொடர்பாக இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது..

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் சராசரி ஒரு நாள் பாதிப்பு 10,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.. எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. கடந்த சில நாட்களாக 2000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது..

மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கழுவுவது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது..

இந்நிலையில் சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.. மேலும் வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.. மேலும் திரையரங்குகள், துணிக்கடைகள், வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் அணியாவிட்டால் எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது தொடர்பாக இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிகிறது.. இந்த ஆலோசனைக்கு பிறகு மாஸ்க் அணியாவிட்டால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

ஏற்கனவே திருவள்ளூர், வேலூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது…

Maha

Next Post

துபாய் செல்லும் வழியில் தொழில்நுட்ப கோளாறு.. பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்...

Tue Jul 5 , 2022
டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.. ஸ்பைஸ்ஜெட்டின் SG-11 என்ற விமானம் இன்று டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது.. ஆனால் செல்லும் வழியிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து , அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. எனினும் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவது இது […]

You May Like