fbpx

இந்த விஷயத்தை நீங்கள் பின்பற்றுகிறீர்களா, அப்படி என்றால் அந்த விஷயத்தில் நீங்கள் தான் கில்லி….! அப்போ இனிமே ஜாலிதான் போங்க…..!

இன்று பலருக்கும் படுக்கை அறையில், அதிலும், உடலுறவில் சரியான ஆற்றலுடன் செயல்பட முடியாமல் போவதுண்டு. அது பற்றிய காரணங்களை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருடைய பாலியல் வாழ்க்கை, அவருடைய ஒட்டுமொத்த மன மற்றும் உடல் உணர்ச்சி, ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது. படுக்கை அறையில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், நிறைவான உடலுறவு அனுபவிக்கவும், அவர் செய்யக்கூடிய பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்வதும் பிரச்சனை தான், உடலுறவில் வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் ஒருவித உளவியல் ரீதியான பிரச்சனை தான் என்று கூறப்படுகிறது.இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றைப் பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய நாட்டை பொறுத்தவரையில், பாலியல் தொடர்பான விஷயங்களோ அல்லது உடலுறவு குறித்த விஷயங்களோ வெளிப்படையாக பேச கூடாத ஒன்றாக இன்றளவும் இருக்கிறது. இது தொடர்பாக பேசுவதாலும், பாலியல் தொடர்பான அறிவுகள் போன்றவற்றை வளர்த்துக் கொள்வதாலும் ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பு மக்களுமே நன்மைகளை அனுபவிப்பார்கள். இதன் காரணமாக, கொஞ்சம், கொஞ்சமாக பள்ளிப் பருவத்திலேயே இது குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க பலர் அறிவுறுத்தி வருகிறார்கள். காதல், காமம், இச்சை, ஆசை, தொடுதல் போன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உடலுறவு உபயோகப்படும். இது காதலர்கள் அல்லது கணவன், மனைவி உள்ளிட்டோருக்குள் நெருக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.

சிலர் உடலுறவு வைத்துக் கொள்வதில் அலாதி இன்பம் இருக்கின்றது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அது எல்லோருக்கும் பொருந்தாது. சிலருக்கு முன் விளையாட்டுகள் காரணமாக, உடலுறவில் அதிக ஈடுபாடு ஏற்படும். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பலர் முன் விளையாட்டுகள் காரணமாக, படுக்கையில் அதிக இன்பம் அடைந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

சிலருக்கு பதற்றம் மற்றும் மன அழுத்தம் காரணமாக, உடலுறவில் அதிக இன்பம் இல்லாமல் போயிருக்கலாம். இது அவர்களுக்குள் படுக்கை அறையில் இருக்கின்ற நெருக்கத்தை முற்றிலுமாக கெடுத்து விடும். இதன் காரணமாக, ஆற்றலும் குறைந்து விடும். ஆகவே மனநிலை தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

அதேபோல சில நேரங்களில், உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் உரையாடுவதும் ஆற்றலை அதிகரிக்க உதவியாக இருக்கும். படுக்கை அறையில் ஒரு சில விஷயங்களை செய்தால் தான் சிலருக்கு பிடிக்கும். அதை தங்களுடைய துணைகள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதுபோன்ற விஷயங்களை அவரிடம் முன்கூட்டியே பேசி விடுவது மிகவும் நன்று.

அதேபோன்று ஒருவருடைய நிலை தொடர்பாக அதற்கு தகுந்த மருத்துவரிடம் கேட்டால், அவர் இதற்கு என்ன செய்யலாம்? என்ன காரணமாக, இருக்கும்? என்பதை விளக்குவார். ஆனால், நீங்களே எதையாவது தேடி இணையதளத்தில் படித்தால், அது தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

Next Post

”இந்த தவறை செய்து வசமா மாட்டிக்காதீங்க”..!! இளம்பெண்கள், குடும்ப பெண்கள் தான் டார்கெட்..!! நடந்தது என்ன..?

Sun Sep 3 , 2023
வசதிகளும், தொழில்நுட்பமும் பெருக பெருக மோசடிகளும், குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. சோஷியல் மீடியாக்களில் இந்த மோசடிகள் அதிகமாகிவிட்டது. நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்தால், ஓவர்நைட்டில் பணக்காரராகிவிடலாம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை சொல்லி, மயக்குகிறது அந்த கும்பல். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாகுபாடில்லாமல் மாட்டிக் கொள்கிறார்கள். அந்தவகையில், திருச்சியில் மட்டும் 6 மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளதாக சைபர் கிரைம் […]

You May Like