fbpx

பெண்களே இரவில் இதை பயன்படுத்துங்கள்….! உங்கள் முகத்தில் ஏற்படும் அதீத மாற்றத்தை தாங்களே உணர்ந்து கொள்வீர்கள்….!

பெண்களுக்கு பளபளப்பான முகம் மற்றும் சருமத்திற்கு மிகவும் உதவிகரமாக இருப்பது கற்றாழை. இதில் ஜிப்ரலில் என்ற தாவர வளர்ச்சி ஊக்கிகள் இருப்பதால், முகத்தில் புதிய செல்களை ஏற்படுத்த கற்றாழை உதவியாக இருக்கிறது. அத்துடன், இது சருமத்தை சுத்தம் செய்கிறது. பரபரப்பான வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக, பெண்கள் பலருக்கும் முகத்தில் பலவிதமான சரும பிரச்சனைகள் இருக்கின்றன. முகப்பருவில் ஆரம்பித்து, சுருக்கம், கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள், வறட்சி என்று எல்லா விதமான சரும பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக கற்றாழை இருக்கிறது.

இந்த முகப்புள்ளிகளில் இருந்து, நிவாரணம் பெறுவதற்கு, எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து, பேஸ்ட் தயார் செய்ய வேண்டும். அதேபோல முகப்பருவுக்கு, கற்றாழையுடன் விட்டமின் ஈ கேப்சூல் சேர்த்து, பயன்படுத்தலாம். இப்படி பலவிதமான முறைகளில் சரும பிரச்சனைக்கு கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது நன்று. அந்த விதத்தில், இந்த பதிவில் கற்றாழை ஜெல்லை முகத்தில் எப்படி பயன்படுத்தலாம்? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அதாவது, இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, நன்றாக கலக்கி, முகத்தில் தடவி, பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதேபோல, இரவு உறங்குவதற்கு செல்வதற்கு முன்பாக, கற்றாழை ஜெல்லை, பிரஷ்ஷாக எடுத்து, முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். காலை எழுந்தவுடன், முகத்தை கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும். முகச்சுருக்கங்களின் காரணமாக, அவதியுற்று வந்தால், காற்றாழை ஜெல்லுடன், தேங்காய் எண்ணெய், தேன் உள்ளிட்டவற்றை சேர்த்து, முகத்தில் தடவி வரவும். இது முக சுருக்கங்களை வெகுவாக குறைக்கும்.

Next Post

என்ன பிடிக்கலைன்னு சொன்ன நீ உயிரோடவே இருக்க கூடாது, செத்துப் போ….! மாணவியை கொலை செய்ய முயன்ற இளைஞர் கடைசியில் நடந்த ட்விஸ்ட்….!

Sun Sep 3 , 2023
விழுப்புரம் அருகே, திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை கொடூரமாக கொலை செய்ய முயன்ற இளைஞரால் பரபரப்பு. அதாவது, விழுப்புரம் அருகே இருக்கின்ற பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வெற்றிச்செல்வன் (35) இவர் வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்தார். அதோடு, மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், அதே பகுதியில் இருக்கின்ற கல்லூரியில் ஒரு மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த […]

You May Like