fbpx

ஃப்ரைடு சிக்கன் வாங்க காசு தராத மனைவி.! கத்திரிக்கோல் எடுத்து சராமாறியாக குத்திய கணவன்.! பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.!

ஃப்ரைடு சிக்கன் வாங்க பணம் தராததால் மனைவி கொடூரமாக புத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள பிரேம் நகர் காலனி பகுதியில் டைலராகக பணியாற்றி வருபவர் ஷாகித் ஹுசைன். இவரது மனைவி நூர் பானு. இவர் கடந்த 24 ஆம் தேதி அன்று ஃப்ரைடு சிக்கன் வாங்க பணம் தர வேண்டும் என மனைவியை தொந்தரவு செய்து இருக்கிறார். இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்ததாக இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அவரது மனைவி வெளியே சென்று கணவருக்கு சமைத்துக் கொடுப்பதற்காக சிக்கன் வாங்கி வந்திருக்கிறார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவரது கணவர் ஷாகித உசேன் தையல் வேலைக்கு பயன்படுத்தும் கத்தரிக்கோல் எடுத்து மனைவியை கொடூரமாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் நூர் பானு.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் நூர் பானு. இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட அவரது கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஃப்ரைடு சிக்கன் தொடர்பாக மனைவி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

"மகளிர் ஓட்டு எப்போதுமே நமக்கு தான்.." மாவட்டச் செயலாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!

Sun Nov 26 , 2023
தமிழகத்தின் பாரம்பரியமிக்க அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மாநாடு சென்னை டி நகரில் வைத்து தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர். இதில் கலந்துகொண்டு பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திராவிட முன்னேற்றக் கழக […]

You May Like