ராஜஸ்தான் மாநிலத்தின் தௌசா மாவட்டத்தில் பள்ளிச் சீருடை அணிந்திருந்த இரண்டு சிறுமிகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி, அதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, வைரலாகும் காட்சிகளில் இரண்டு சிறுமிகளை சிலர் பாழடைந்த கட்டடம் ஒன்றை நோக்கி அழைத்துச் செல்வது போன்ற […]
investigation
விழுப்புரம் கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான சுதா. கடந்த சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மதியம் பிறந்த நிலையில், சுதா இரவில் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ரகசியமாக வெளியேறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், இது குறித்து உடனடியாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், […]
குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்களுக்கு உணவு, கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றை மட்டும் கற்றுக் கொடுப்பது அல்ல. எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கு நேரும் பிரச்சினைகள், அச்சம் அல்லது துன்புறுத்தல்கள் குறித்து தயக்கமின்றி பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கையையும் அவர்களிடம் உருவாக்க வேண்டும். குழந்தைகள் மனம் திறந்து பேசும் சூழலை பெற்றோர் ஏற்படுத்தினால், பல துயர சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், தனக்கு […]
பெங்களூரு, கிட்டகனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகப்பா. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 11 மாத குழந்தை ஒன்றும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதி தங்களின் குழந்தையை ஈஸ்ட் பாயிண்ட் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மருத்துவர்களுக்கு இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், போலீசாருக்கு தகவல் தெரிவித்த […]
டெல்லி வெடி விபத்து சம்பந்தமாக டெல்லி காவல்துறையினர் சட்டவிரோத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து […]
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன். கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழுவிடம், கரூர் டவுன் போலீஸார் மற்றும் […]
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், திமுக அரசு எதை மறைக்கப் பார்க்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. […]
கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குஜராத் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், இன்று முதல் தனது விசாரணையை நடத்த உள்ளார். கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி வில்லிவாக்கம் தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை […]
சென்னையில் திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பார்கவுன்சில் இணை தலைவர்கள் ஆர்.அருணாசலம், சரவணன் ஆகியோரை கொண்ட சிறப்புக்குழுவை நியமித்து பார்கவுன்சில் உத்தரவு. கடந்த 7-ஆம் தேதி சென்னை உயர் நீதின்றம் அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திருமாவளவன் சென்ற காருக்கு குறுக்கே வந்துள்ளது. […]
நீதிமன்றத்தில் இன்று அண்ணாமலை நேரடியாக டி.ஆர்.பாலுவிடம் குறுக்கும் விசாரணை செய்ய உள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் […]

