உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் இர்பான் என்பவர் வசித்து வருகிறார். அவர் ஒரு நிலத்தடியில் இரண்டு மாடி அரண்மனையை கட்டியுள்ளார். இந்த கட்டிடக்கலை அதிசயத்தை உருவாக்க அவருக்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவர் ஒரு மசூதி, 11 அறைகள், படிக்கட்டுகள், ஒரு கேலரி மற்றும் ஒரு சித்திர அறையையும் வடிவமைத்துள்ளார். இந்த அரண்மனையை கடந்த 2011ஆம் ஆண்டு கட்டத் தொடங்கியதாகவும், அதை மேலும் விரிவுபடுத்த ஆர்வமாக இருப்பதாகவும் இர்ஃபான் கூறியுள்ளார்.
அரண்மனையின் சுவர்களில் குர்பாவின் உதவியுடன் பழைய கால வேலைப்பாடுகளையும் செதுக்கியுள்ளார். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்த அரண்மனையிலேயே கழித்துள்ளார். குடும்பத்துடன் உணவு உண்பதற்காக மட்டுமே தனது வீட்டிற்குத் திரும்புகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு வரை இர்பான் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். ஆனால், அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவரது வாழ்க்கையில் கடுமையான திருப்பம் ஏற்பட்டது.
அவர் தனது பகுதியிலேயே தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால், தோல்வியை சந்தித்தார். இந்த பின்னடைவுக்குப் பிறகு அவர் தனது வீட்டை விட்டு வெளியேறினார். அவர் இந்த சவால்களில் இருந்து விலக மறுத்து, தளராத அர்ப்பணிப்புடன் முன்னேறினார். எங்கோ ஒரு ஒதுக்குப்புறமான இடத்தைக் கண்டறிந்தார். அங்கே ஒரு நிலத்தடி அரண்மனையைக் கட்டும் யோசனையில் ஈடுபட்டார். அதில் வெற்றி பெற்று, வெளியில் அமைந்திருந்த தரிசு நிலத்தில் கடுமையாக உழைத்தார். இர்பான் தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் விவசாயம் செய்தார்.
அவர் இப்போது இங்கு ஒரு விவசாயியாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மேலும், அவர் ஒரு கிணற்றையும் தோண்டியுள்ளார். ஆனால், சில குண்டர்கள் அதை அழித்துவிட்டனர். இர்பானின் வீட்டை பார்க்கும் போது, மன்னர்கள் பயன்படுத்திய ரகசிய அறைகள் போன்று உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.