தமிழகத்தில் ஆளும் கட்சியை விமர்சித்து வரும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது புதிய பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ’’ திமுகவில் தான் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையை அதிக அளவில் விமர்சித்து வருகின்றார்கள். அநாகரீகமாக பேசி வன்மத்தை கக்குவது அவர்கள்தான். அநாகரீகமாக பேசுவதற்காகவே திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், சமூக ஊடக பிரிவினர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால், நான் தமிழக அரசை தனி மனிதனாக இருந்து எதிர்க்கின்றேன். திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகின்றது. அவர்கள் இதில்என்னென்ன ஊல் செய்துள்ளார்கள்.
காங்கிரஸுக்கு ஒரு 2 ஜியை போல் திமுகவுக்கு எனர்ஜி நிறுவனமான பி.ஜி.ஆர். என்று பட்டியல் போட்டு வைத்துள்ளோம். சரியான காலம் வரும்போது அந்த ஊழல் பட்டியலை வெளியிடுவோம். அது வெளியானதும் இந்த ஊழல் புகாரால் தி.மு.க.வின். அஸ்திவாரமே ஆடிப்போகும் என்றார்.
ஒரு தனிமனிதனாக தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் இல்லாத தகுதி எனக்கு உள்ளது. மிகப்பெரிய குடும்ப பின்புலம் இல்லாமல் முதல் தலைமுறை அரசியல்வாதியாக நான் இவ்வளவு தூரம் பயணித்துள்ளேன். இதை கட்சி சார்ந்த சிலர் ஊடகங்களின் போர்வையில் ஒளிந்து கொண்டு என்னை அழித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். அறம் சாராமல் ஒரு கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்களை நான் தொடர்ந்து எதிர்ப்பேன் என தெரிவித்தார்.