மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உயர்கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை கூறியதாவது; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கல்வி மற்றும் தனி கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டு, ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பது அரசுக்கு தெரிய வந்தால் கல்லூரி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது.