fbpx

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்!. 2வது கட்டமாக 116 பயணிகள் இந்தியா வந்தனர்!.

Illegal immigration: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் 116 பேர் 2ம் கட்டமாக தாயகம் வந்தடைந்தனர்.

அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யுள்ள இந்தி​யர்​களில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர். அவர்கள் பயணித்த விமானம் சனிக்கிழமை (பிப்.15)இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது. அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அந்த வகையில் கடந்த 5-ம் தேதி சி-17 என்ற ராணுவ விமானத்​தில் நேற்று 104 இந்தி​யர்கள் அமெரிக்​கா​வில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் கை மற்றும் கால்கள் விலங்கிட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை அன்று அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்கள் தாயகத்துக்கு கொண்டு வந்தது அமெரிக்கா. இரவு 10 மணிக்கு அவர்களது விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 11.30 மணி அளவில் அந்த விமானம் அமிர்தசரஸ் வந்தடைந்தது. இதில் 65 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 33 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள். 8 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். கோவா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா 2 பேர் மற்றும் ஜம்மு காஷ்மீர், இமாச்சல் மாநிலத்தை சேர்ந்த தலா ஒருவர் தாயகம் வந்துள்ளனர்.

அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப அழைத்துக்கொள்ள தயார் என உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: பெரும் துயரம்!. டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி!. மகா கும்பமேளா செல்லும்போது நிகழ்ந்த சோகம்!. பிரதமர் மோடி இரங்கல்!

English Summary

Illegal immigration in America!. 116 passengers arrived in India in the 2nd phase!.

Kokila

Next Post

’எப்பவுமே சோர்வா இருக்கீங்களா’..? அப்படினா ஹீமோகுளோபின் தான் பிரச்சனை..!! இனி இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்..!!

Sun Feb 16 , 2025
ஹீமோகுளோபின் எனப்படுவது நமது ரத்தத்தில் இருக்கக்கூடிய சிவப்பணுக்களாகும். இந்த சிவப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை நமது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது. இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை ரத்தத்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்போது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறையும் போது வெளிறிய தோல் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவற்றின் எண்ணிக்கையை நமது உணவு முறையின் மூலமாகவே அதிகரித்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் […]

You May Like