காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் பொது விநியோகத் திட்ட குறைத்திருக்கும் முகம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 08.07.2023 அன்று காலை 10.00 மணிக்கு, சிறுவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் ஆனம்பாக்கம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளாவூர், ‘திருப்பெரும்புதூர் வட்டத்தில் போந்தூர், குன்றத்தூர் வட்டத்தில் சிக்கராயபுரம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம்பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.