ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்ற பயங்கரமான சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் தான் இந்த பயங்கரமான விபத்து நடந்திருக்கிறது. இந்த பயங்கர விபத்தில் பயணிகள் ரயில் ஒன்று பேருந்துடன் மோதியிருக்கிறது. இந்த விபத்தில் பேருந்து பயங்கரமாக சேதம் அடைந்துள்ளது. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து இன்ராசிட்டி ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 84 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக நைஜீரியா அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதுபோன்ற கொடூரமான விபத்துக்கள் உலக நாடுகளில் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அரசாங்கங்கள் எவ்வளவு தான் பாதுகாப்பு விதிமுறைகளை விதித்திரிந்தாலும் சில நேரங்களில் ஒரு தனி மனிதனின் தவறுதலால் மிகப்பெரிய அசம்பாவிதத்தில் சென்று முடிந்து விடுகிறது.