fbpx

கொரோனா பாதிப்பால் மொத்தம் 28 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 3,011 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 28 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,060 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,45,97,498 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,32,671 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,701 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,18,77,06,075 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,70,034 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா..!! அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

Mon Oct 3 , 2022
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டம் ரோகித் சர்மாவுக்கு 400-வது டி20 போட்டி ஆகும். கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் 400 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா. அதிக டி20 ஆட்டங்களை விளையாடிய இந்திய வீரர்களின் வரிசையில் ரோகித் சர்மா ஏற்கனவே முதலிடத்தில் உள்ள நிலையில், தற்போது […]

You May Like