fbpx

India Corona..!! இந்தியாவை மீண்டும் உலுக்குகிறதா கொரோனா..? தினசரி பாதிப்பு கிடுகிடு உயர்வு..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,629 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த புதன்கிழமை 8 மாதங்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டது. 12,591 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால், கடந்த சில தினங்களாக சற்று குறைந்து பதிவானது. அந்தவகையில், நேற்றைய தினம் 6,934 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கிடுகிடுவென உயர்ந்து 9,629 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தை விட 40% அதிகமாகும். இந்தியாவில் மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61,000ஆக குறைந்துள்ளது.

இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,43,23,045 பேர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,369ஒல் இருந்து 5,31,398 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.68 சதவீதமாக பதிவாகியுள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 29 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 63,380இல் இருந்து 61,013 ஆக குறைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 15,169 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 5549 பேர், தலைநகர் டெல்லியில் – 4995 பேர், உத்தரப்பிரதேசத்தில் – 4257 பேர், தமிழ்நாடு – 3585 பேர், ஹரியானாவில் – 5011 பேர், குஜராத்தில் – 1762 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 1270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 61,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1,79,031 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 6 பேர், மகாராஷ்டிராவில் 3 பேர், ராஜஸ்தானில் 3 பேர், உத்திர பிரதேசத்தில் 2 பேர், ஹரியானாவில் 2 பேர், குஜராத்தில் ஒருவர் என மொத்தம் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார துறை தரவுகளின்படி, இந்தியா முழுவதும் இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், இணை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவிறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

’ரயிலில் இந்த பெர்த் மட்டும் கிடைத்தால் ரொம்ப கவனமா இருங்க’..!! ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Wed Apr 26 , 2023
நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது உங்களுக்கு எந்த பெர்த் கிடைக்கிறதோ அந்த பெர்த்துக்கு ஏற்றபடி உங்களுக்கான விதிகள் மாறுபடும். இது தொடர்பாக ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரயில் பயணம் என்பது பலருக்கும் பிடித்தமானது. நீண்ட தூரம் பயணிக்க பேருந்தை விட ரயில் சிறப்பானது. அதே சமயம் பட்ஜெட் ரீதியாகவும் பேருந்து, விமானத்தை விட ரயில் குறைவான கட்டணம் கொண்டது. பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் […]
’ரயிலில் இந்த பெர்த் மட்டும் கிடைத்தால் ரொம்ப கவனமா இருங்க’..!! ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

You May Like