fbpx

’இந்திய வீரர்கள் நல்ல நடிகர்கள்’..!! ’பிக்ஸ் செய்யப்பட்ட மேட்ச்சில் விளையாடுவது போல் நடிப்பு’..!! பிரபல நடிகை பரபரப்பு பதிவு..!!

இந்தியா-நியூசிலாந்து போட்டியின் முடிவு பிக்ஸ் செய்யப்பட்டது என்று பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி குற்றம் சாட்டியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடிய நிலையில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டி பிக்ஸ் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி குற்றம் சாட்டியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியதில் இருந்து எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய ட்விட்டுகளை ஷின்வாரி பதிவிட்டு வருகிறார்.

அதாவது, “வங்கதேச அணியால் மட்டுமே இந்திய அணிக்கு நல்ல பாடம் கற்பிக்க முடியும்” என்று அவர் போட்ட பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், “இந்தியர்கள் ஏன் பாகிஸ்தான் வங்களா தேச நட்பைப் பார்த்து இவ்வளவு பொறாமைப்படுகிறார்கள்? 1971இல் எங்களை உடைத்த போதிலும், இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட்டில் நாங்கள் இரு நாடுகளும் ஒருவரையொருவர் ஆதரிப்பது அவர்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியை விமர்சித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய அணி வீரர்கள் நல்ல நடிகர்கள். போட்டியில் அவர்கள் வெல்வது பிக்ஸ் செய்யப்பட்ட நிலையிலும் விளையாடுவது போல நடிக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார். நடிகை சேஹர் ஷின்வாரியின் இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

மகன் இறந்த சோகம்..!! அதே ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்..!!

Thu Nov 16 , 2023
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் சாந்தி புரத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (47). இவரது கணவர் ரமேஷ், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துச் சென்றுவிட்டார். அந்த மன உளைச்சலில், அவரது மகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் லோகேஸ்வரன் (30) மத்திய நிறுவனமான ஆவடி எச்.வி.எப்., நிறுவனத்தில், ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், லோகேஸ்வரன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று […]

You May Like