இரவில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே புதிய விதிகளை அறிவித்துள்ளது. மற்ற பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ரயில்வே வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, அந்தந்த இருக்கைகள், பெட்டிகளில் உள்ள பயணிகள் யாரும் இயர்போன் இல்லாமல் உரத்த குரலில் மொபைலில் பேசவோ அல்லது அதிக ஒலியில் இசையைக் கேட்கவோ கூடாது. இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். எனவே, ஒவ்வொரு பயணிகளும் சிறந்த பயண அனுபவத்தைப் பெறுவதற்கும், ரயில் சேவைகள் சிறப்பாகச் செயல்படுவதற்கும் இந்த விதிகள் அவசியம்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/03/image.png)
இருக்கையிலோ, பெட்டியிலோ அல்லது கோச்சிலோ எந்தப் பயணியும் உரத்த குரலில் மொபைலில் பேச கூடாது. இயர்போன் இல்லாமல் அதிக சத்தத்துடன் எந்தப் பயணியும் பாடல் கேட்க கூடாது. இரவு விளக்கு தவிர, 10 மணிக்குப் மேல் எந்தப் பயணிகளும் விளக்குகளை எரிய வைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதிய விதிகளை மீறினால் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.