fbpx

இந்தியாவின் UPI!. 2027-ல் பெரு மற்றும் நமீபியாவில் அறிமுகம் சாத்தியம்!. CEO அறிவிப்பு!.

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கு Unified Payments Interface இன் ப்ளூபிரிண்ட்களை வழங்க தயாராக உள்ளதாக NIPL CEO ரித்தேஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரும் புரட்சியைஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவது கணிசமான அளவு குறைந்துவிட்டது. அதாவது ஏடிஎம் மையங்களில் சென்று கார்டினை பயன்படுத்தி பணம் எடுப்பது அல்லது பொருட்களை வாங்கும் இடங்களில் கார்டினை பயன்படுத்தி ஸ்வைப் செய்து பணம் செலுத்துவது என்பன உள்ளிட்ட நடைமுறைகள் குறைந்துவிட்டன. இதையடுத்து, யுபிஐ சேவையை மேம்படுத்துவம் வகையில், புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் இந்த செயல்முறை அறிமுகமாகியுள்ளனர்.

அந்தவகையில், தற்போது, யுபிஐயை நிர்வகிக்கும் என்பிசிஐயின் வெளிநாட்டு நிறுவனமான என்ஐபிஎல், பெரு மற்றும் நமீபியாவின் மத்திய வங்கிகளுடன் யுபிஐ போன்ற அமைப்பை உருவாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. NIPL CEO ரித்தேஷ் சுக்லாவின் கூற்றுப்படி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கு Unified Payments Interface இன் ப்ளூபிரிண்ட்களை வழங்க தயாராக உள்ளோம் என்று கூறினார். மேலும், UPI 2027 இல் பெரு மற்றும் நமீபியாவில் தொடங்கப்படலாம் என்று கூறினார். அதாவது இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் UPI போன்ற அமைப்பைத் தொடங்கலாம்.

யுபிஐ தொடர்பாக ருவாண்டாவுடனும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. யுபிஐ போன்ற விரைவான கட்டண முறைகளை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகள் நிதி பரிவர்த்தனைகள் நடத்தப்படும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன, இது மில்லியன் கணக்கானவர்களுக்கு நிகழ்நேர, பாதுகாப்பான மற்றும் தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.

மற்ற நாடுகளில் இந்தியாவின் டிஜிட்டல் கட்டண விரிவாக்கத்தை எடுத்துரைத்த அமைச்சகம், யுபிஐ மற்றும் ரூபே இரண்டும் உலகளவில் வேகமாக விரிவடைந்து வருகின்றன. இது வெளிநாடுகளில் வாழும் மற்றும் பயணிக்கும் இந்தியர்களுக்கு தடையற்ற எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.

தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ் மற்றும் மொரீஷியஸ் போன்ற முக்கிய சந்தைகள் உட்பட 7 நாடுகளில் யுபிஐ வசதி உள்ளது. இது இந்திய நுகர்வோர் மற்றும் வணிகங்களை சர்வதேச அளவில் பணம் செலுத்தவும் பெறவும் அனுமதிக்கிறது.

NPCI (National Payments Corporation of India) என்பது நாட்டின் சில்லறை கட்டண முறையின் ஒழுங்குமுறை அமைப்பாகும். இது நாட்டில் UPI ஐ இயக்குகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 15 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

NPCI eyes Africa, South America for digital payment push via UPI: CEO

Kokila

Next Post

கூந்தல் முதல் எடை இழப்பு வரை!. காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!.

Wed Sep 25 , 2024
What Happens When You Eat Curry Leaves on an Empty Stomach Every Morning?

You May Like