10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், பிப்ரவரி 1-ம் தேதி வரை தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேது ராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் 1-ம் தேதி வரை, மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் சிறப்புக் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேல்நிலை மாணவர்கள் ஆயிரம் ரூபாயும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 500 ரூபாயும் சிறப்புக்கட்டணம் செலுத்த வேண்டும். மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறையின் சேவை மையங்களின் விவரங்களையும், தேர்விற்கான அறிவுரைகள் மற்றும் தகுதிகளையும் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திலும், கல்வித்துறையின் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.