fbpx

‘லோகேஷ் கனகராஜ் உடன் திடீர் சந்திப்பு!’ கூலி படத்தில் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கூலி படக்குழுவை சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கூலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றும் சந்துரு அன்பழகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தான் சிவகார்த்திகேயனும், லோகேஷ் கனகராஜும் கலந்துகொண்டனர். இதனை அடுத்து சந்துரு அன்பழகன் தனது சமூக வலைத்தளத்தில் ‘மாவீரன்’ மற்றும் ’கூலி’ படத்தின் குழுவினர் நேரில் வந்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி என்றும் குறிப்பாக சிவகார்த்திகேயன் அவர்கள் நேரில் வந்தது தனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது என்றும் அவருடைய வாழ்த்தும் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது என்றும் தெரிவித்துள்ளார்.

சந்துரு அன்பழகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மாவீரன் படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கூலி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. நாளடைவில் அதுபற்றி எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது கூலி படக்குழுவையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜையும் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதன்மூலம் கூலி படத்தில் சிவகார்த்திகேயன் இணைவது கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்படுகிறது.

Next Post

'ஐஸ்கிரீமில் விஷம்..!' குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. கணவர் கைது!

Sun May 26 , 2024
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷம் வைத்துக் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள வினோபாஜி நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக சுகமதி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ (6), க்ரிஷிகா (1) […]

You May Like