fbpx

சின்ன பிக்பாஸ் வீட்டில் ஒலிக்கும் குரல் இவருடையது தானா..? வியந்து பார்க்கும் ரசிகர்கள்..!!

ஸ்மால் பிக்பாஸ் வீட்டில் ஒலிக்கும் குரல் யாருடையது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 7-வது சீசன் அக்.1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, வினுஷா, ஜோவிகா, பிரதீப், அனன்யா, பூர்ணிமா, விஜய் வர்மா, நிக்சன், விஷ்ணு, ரவீனா, மணிச்சந்திரா, யுகேந்திரன், ஐஷூ, சரவணன், விசித்ரா, அக்‌ஷயா என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், முதல் வாரத்தின் கேப்டனான விஜய்யை குறைவாக கவர்ந்த 6 போட்டியாளர்கள் ஸ்மால் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கும் ஒரு சின்ன பிக்பாஸ் இருக்கிறார். அந்த 6 போட்டியாளர்களை கலாய்ப்பது, அவ்வப்போது ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதுமாக இருக்கிறார். வழக்கமாக பிக்பாஸ் தமிழ் சீசனுக்கு சாஷோ சதீஷ் சாரதி என்பவர்தான் இத்தனை சீசன்களாக குரல் கொடுத்து வருகிறார் என்பது பார்வையாளர்களுக்குத் தெரியும். ஆனால், இப்போது இரண்டாவது இல்லத்தில் இருக்கும் சின்ன பிக்பாஸ் குரல் யாருடையது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட்டான அரவிந்தன் என்பவர்தான் இந்த சின்ன பிக்பாஸ் குரலுக்குச் சொந்தமானவர். சினிமாவில் முயற்சி செய்து வந்தவருக்கு பிக்பாஸில் குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

நீளமான தாடி வளர்த்து சாதனை படைத்த நபர்; தாடி வளர்க்க இதை தான் செய்தாராம்..

Thu Oct 5 , 2023
பலர் பல விதமான சாதனைகளை செய்வது உண்டு. எதையாவது செய்து பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கும். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் செய்த காரியம் பலரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ஆம், அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா?? ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ். 3 அடி நீளம் கொண்ட தாடியை வளர்த்து இவர் சாதனையை படைத்துள்ளார். மேலும், மாநிலத்திலேயே நீளமான தாடி வைத்துள்ள […]

You May Like