fbpx

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இருந்து வெளியேறினாரா பிரியா….? ரசிகர்கள் அதிர்ச்சி…..!

விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஈரமான ரோஜாவே தொடரில் திரவியம் மற்றும் பவித்ரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். இந்த தொடரும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதன் பிறகு அதே பெயரில் இரண்டாம் பாகம் ஆரம்பமானது. இதிலும் திருமணம் செய்ய போகும் ஜோடிகள் மாற்றப்பட்டு அதை வைத்து கதைக்களம் நகர்ந்து வருகிறது.

சமீபத்தில் இந்த தொடரில் ஜீவா வேடத்தில் நடிக்கும் திரவியம் ஒரு புதிரான பதிவை வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் பிரியா வெளியேறுகிறாரா? அதனால் தான் இவர் இப்படி பதிவு போடுகிறாரா? என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால் அந்த செய்திகளில் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது. அது வெறும் வதந்தி மட்டுமே என்று சொல்லப்பட்ட நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் சுவாதி தன்னுடன் நடிக்கும் திரவியத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

Next Post

கணவரின் குடிப்பழக்கத்தினால் நேர்ந்த விபரீதம்! ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை!

Thu Mar 23 , 2023
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சதாசிவம் வயது 43. திமுக ஒன்றிய துணைச் செயலாளரான சதாசிவம் அப்பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிதா வயது 38. இவர் குனிச்சி மோட்டூர் பகுதியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். […]

You May Like