fbpx

ஈஷா யோகா மையம்..!! அமைச்சரின் பதிலை கேட்டு டென்ஷனான துரைமுருகன்..!! சட்டப்பேரவையில் பரபரப்பு..!!

சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் அவை முன்னவர் துரைமுருகன் கடிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு மக்களவைத் தேர்தல் காரணமாக பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக கடந்த 20ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.

இந்நிலையில், கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் வனத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா..? என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆய்வறிக்கைக்கு பின்னர் தான், அதுகுறித்து தெரியவரும் என்றார். அப்போது, குறிக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், மூன்றாடுகளாகவா ஆய்வு செய்து கொண்டிருக்கிறீர்கள்..? என்று அமைச்சரை கடிந்து கொண்டார்.

Read More : அச்சுறுத்தும் டெங்கு..!! அச்சத்தில் மக்கள்..!! கிடுகிடுவென உயரும் எண்ணிக்கை..!! பாதுகாப்பா இருங்க..!!

English Summary

The incident in which the Speaker of the House, Durai Murugan, scolded Forest Minister Mathiventhan in the Legislative Assembly created a stir.

Chella

Next Post

தண்ணீரோடு தங்கம் வழியும் அதிசய ஆறு! இந்தியாவில் எங்கு இருக்கு தெரியுமா?

Tue Jun 25 , 2024
The miracle of gold flowing through Odisha, originating in Jharkhand, remains a mystery unsolved by many explorers till date.

You May Like