நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி வெற்றியடைந்து சாதனை படைத்தது. இந்தவெற்றியால் நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏற்கனேவே அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சந்திராயன் 3 லேண்டர் தரையிறங்கிய பிறகு லேண்டிங் இமேஜர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இஸ்ரோவின் பதிவில் “லேண்டிங் இமேஜர் கேமரா
தரையிறங்கிய பிறகு படம் பிடித்தது. இது சந்திரயான்-3 தரையிறங்கும் தளத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது. ஒரு கால் மற்றும் அதனுடன் இணைந்த நிழல் கூட பார்க்கப்படுகிறது. சந்திரயான்-3 சந்திர மேற்பரப்பில் ஒப்பீட்டளவில் சமதளமான பகுதியைத் தேர்ந்தெடுத்தது” என்று பதிவிட்டுள்ளது.