fbpx

ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… பணி நிரவல் கலந்தாய்வு தேதி மாற்றம்…! பள்ளி கல்வித்துறை உத்தரவு…!

பணி நிரவல் கலந்தாய்வு, நவம்பர் 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசுப் பள்ளிகளில் முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்துக்குள் பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணி நிரவல் கலந்தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வழியாக 20-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக நடைபெறவிருந்த பணி நிரவலானது ஒத்தி வைக்கப்பட்டது. பணி நிரவல் கலந்தாய்வு, நவம்பர் 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆண்டுக்கு 4 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்..! மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி அறிவிப்பு...!

Wed Nov 22 , 2023
தெலங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 4 இலவச கேஸ் சிலிண்டர், பட்ட படிப்பு படிக்கும் பெண்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌ தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி 119 தொகுதிகளுக்கு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்ரீய சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு […]

You May Like