அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு உலகின் சக்தி வாய்ந்த தொலை நோக்கியாக கருதப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது.
விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட பின் இதுவரை காணாத ஆதி பிரபஞ்சத்தின் புகைப்படங்களை படம்பிடித்து அனுப்பி உலக நாடுகுளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஜேம்ஸ்வெப் தொலைநோககி அதன் பிறகு ஆரோராக்களுடன் கூடிய வியாழன் கோளின் வித்தியாசமான புகைப்படங்களை அனுப்பியது.
இன்னும் பல புகைப்படங்களை புவிக்கு அனுப்ப தனது பணியை தீவிரமாக செய்து கொண்டிருந்த நிலையில் தொலைநோக்கியின் மத்திய அகச்சிவப்பு கருவியல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஆகஸ்ட் 24ம் தேதி நடுத்தர தெளிவுத்திறன் ஸ்பெக்ட்ரோஸ் கோபி அறிவியல் கண்காணிப்பு அமைப்பின் போது அதிகரித்த உராய்வைக் காட்டியதாக நாசா கூறியது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மேற்கொண்டிருந்த ஆய்வுப்பணிகள் செப்டம்பர் 6ல் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. மத்திய அகச்சிவப்பு கருவியின் மற்ற 3 பாகங்களான இமேஜிங் , குறைந்த தெளிவுதிறன் ஸ்பெக்ட்ரோஸ் கோபி மற்றும் கரோனாகிராப் ஆகியவை சீராக இயங்குவதால் , ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றதுஎன நாசா விளக்கமளித்துள்ளது.
இந்த தொலைநோக்கி தொழில்நுட்ப கோளாறை சந்திப்பது இது முதல்முறை அல்ல. இந்தாண்டு ஜுலை 19ல் சிறிய விண்வெளிப் பாறைகளால் சேதமடைந்தது. தொலை நோக்கியில் உள்ள 18 கண்ணாடிகளில் ஒன்றில் பாறை சற்று கடினமான சேதத்தை ஏற்படுத்தியதாக நாசா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.