fbpx

ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ஜார்கண்ட் முதலமைச்சருக்கு சிக்கல்..

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையம் ஜார்க்கண்ட் ஆளுநருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.. இதுதொடர்பான பரிந்துரையை தேர்தல் ஆணையம் ஜார்கண்ட் மாநில ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை குறித்து என்ன முடிவெடுப்பது என்பது ஆளுநரின் கையில் உள்ளது, ”என்று கூறினார்.

தனது முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி கல் குவாரி சுரங்கங்களை குத்தகைக்கு பெற்று முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால், அவரை சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநில எதிர்க்கட்சியான பாஜகவிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் ஜார்கண்ட் கவர்னர் தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்டிருந்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் தனது பரிந்துரைகளை அனுப்பியுள்ளதாக ஜார்கண்ட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை ஜார்கண்ட் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது குறித்து ஆளுநர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது குறித்து ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவும் ஆவலுடன் காத்திருக்கின்றன

Maha

Next Post

டாஸ்மாக் கடையை திடீரென முற்றுகையிட்ட பொதுமக்கள்: நொடிக்கு நொடி எகிறிய பதற்றம்..!

Thu Aug 25 , 2022
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செண்பகத்தோப்பு சாலை அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று பிற்பகல் திடீரென்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. நேற்று திறக்கப்பட்ட புதிய கடை அருகில் மத்திய சுங்க இலாகா அலுவலகமும், மேல்நிலைப்பள்ளியும், குடியிருப்புகளும் உள்ளன. கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அம்பேத்கர் நகரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் […]

You May Like