தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது.
டெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 1953ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ஏறத்தாழ அனைத்துத் தொழில் துறைகளிலும் தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது என்றார். இந்தியாவில் 2000க்கும் அதிகமான காப்புரிமைகளை தாக்கல் செய்வதற்கும் இது உதவியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
மத்திய அரசால் நீடிக்கப்பட்ட பலன்களைப் பெறுவதற்கு தொழில்நுட்ப ரீதியாக புத்தொழில்களை மதிப்பீடு செய்ய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி)யின் அமைச்சகங்களுக்கு இடையேயான வாரியங்களுக்கு என்ஆர்டிசி உதவுகிறது என்றும் இதுவரை புத்தொழில்களின் 7500 விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.