fbpx

“மக்களே கவனம்” இந்த மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…! முழு விவரம் இதோ

தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள வங்கிகள் ஜூன் மாதத்தில் 12 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள வங்கிகள் ஜூன் மாதத்தில் 12 நாட்களுக்கு மூடப்படும். ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு திட்டத்தை வகுக்கிறது, அதன்படி வங்கிகளுக்கு வருடாந்திர விடுப்புகள் விடபட்டு வருகிறது. இருப்பினும், வெவ்வேறு காரணத்தினால் வெவ்வேறு மாநிலங்கள் அல்லது நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலில் ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மட்டுமே அடங்கும். ஜூன் மாதத்தில் திருவிழாக்கள் கிடையாது. எனவே, பணி நிமித்தமாக உங்கள் வங்கிக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், உங்கள் பிராந்தியத்தின்படி ஜூன் மாதத்தில் வங்கி விடுமுறையை உறுதிப்படுத்த உங்கள் உள்ளூர் கிளையைத் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த மாதத்தில், மொத்தம் 11 வங்கி விடுமுறைகள் இருந்தன.

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 4, 2023- இந்த நாளில் நாடு முழுவதும் வங்கிகள் விடுமுறை.

ஜூன் 10, 2023- இரண்டாவது சனிக்கிழமையன்று இந்த நாள் வங்கிகளுக்கு விடுமுறை.

ஞாயிறு, ஜூன் 11, 2023- இந்த நாளில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

வியாழன், ஜூன் 15, 2023- ராஜ சங்கராந்தி காரணமாக மிசோரம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் விடுமுறை.

ஞாயிறு, ஜூன் 18, 2023- இந்த நாளில் நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது.

செவ்வாய்க்கிழமை, ஜூன் 20, 2023- ரத யாத்திரை காரணமாக ஒடிசாவில் வங்கிகளுக்கு விடுமுறை.

சனிக்கிழமை, ஜூன் 24, 2023- நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகள் விடுமுறை.

ஞாயிறு, ஜூன் 25, 2023- இந்த நாளில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

திங்கட்கிழமை, ஜூன் 26, 2023- கார்வி பூஜை காரணமாக திரிபுராவில் வங்கிகள் இயங்காது.

புதன்கிழமை, ஜூன் 28, 2023- ஈத்-உல்-அழா காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் விடுமுறை.

வியாழன், ஜூன் 29, 2023- ஈத்-உல்-அழாவை முன்னிட்டு மற்ற மாநிலங்களில் வங்கிகள் விடுமுறை.

வெள்ளிக்கிழமை, ஜூன் 30, 2023- ஈத்-உல்-அழா அன்று மிசோரம், ஒடிசாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

Vignesh

Next Post

#Tngov: பள்ளிகள் திறந்த பின் இதை எல்லாம் அவசியம் பின்பற்ற வேண்டும்...! அரசு ஸ்ட்ரிட்டான உத்தரவு...!

Thu Jun 1 , 2023
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பும், திறந்த பின்பும் செய்ய வேண்டிய அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில்‌ படிக்கும்‌ மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில்‌ வகுப்புகள்‌ ஜூன்‌ 7-ம்‌தேதி முதல்‌ துவங்கவுள்ளது. இந்த நிலையில்‌ பள்ளி வளாகத்தை சுத்தமாகவைத்திருப்பது குறித்தும்‌ பள்ளியில்‌ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்தும்‌ பள்ளி கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

You May Like