fbpx

நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்…! கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் பரபரப்பு…!

ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு தங்களுக்கு நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றும், சில BBMP ஒப்பந்ததாரர்கள் தற்போதைய அரசாங்கம் 15 சதவீத கமிஷன் கேட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த துணை முதல்வர் சிவக்குமார், “முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, எம்எல்ஏ ஆர் அசோகா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்பந்ததாரர்களின் கமிஷன் குறித்து குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இது தொடர்பாக பதில் அளித்த அவர் பாஜக அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது ஒப்பந்ததாரர்களுக்கு பில் ஏன் செலுத்தப்படவில்லை?”

காண்டிராக்டரின் பில் கட்ட விடாமல் தடுத்தது யார்..? அவர்களிடம் பணம் இல்லையா..? வேலை சரியாக நடக்கவில்லையா..? இந்தக் கேள்விக்கு பாஜக தலைவர்கள் முதலில் பதில் சொல்லட்டும். மீதியை ஒப்பந்ததாரர்களுக்குப் பதில் சொல்கிறேன்” என்றார் சிவக்குமார். .

Vignesh

Next Post

மக்களே...! மாடுகளை தாக்கும் அம்மை நோய்...! உடனே தடுப்பூசி போடவும்...! இல்லையென்றால் ஆபத்து...!

Sat Aug 12 , 2023
திருவள்ளூர் மாவட்டத்தில் மாடுகளை தாக்கும் அம்மைநோய் பரவாமல் தடுப்பதற்கு, மாவட்ட கால்நடை துறையினரால் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாடுகளுக்கு தோல்கழலை நோயின்‌ அம்மைநோய்‌ தாக்கம்‌ பரவலாக ஏற்பட்டு கால்நடைகளுக்கு பெரும்‌ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2.74 லட்சம் கறவை பசுகள் மற்றும் மாடுகள், 56,000 எருமைகள் உள்ளன. இந்நோயினை கட்டுப்படுத்தும்‌ நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறையின்‌ மூலமாக மாவட்டத்திலுள்ள மொத்தம், 3.30 லட்சம் மாடுகளுக்கு இத்தடுப்பூசியினை செலுத்தும்‌ பொருட்டு தடுப்பூசி மருந்துகள்‌ […]

You May Like