fbpx

ஒரே இரவில், கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்., மீனவருக்கு இன்ப அதிர்ச்சி.!

கேரள மாநிலத்தில் பூங்குஞ்சு என்ற நபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மீனவர் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், இவருக்கு வீடு கட்டியதற்காக ஒன்பது லட்சம் ரூபாய் கடன் இருந்தது.

எனவே அவர் கடன் வாங்கிய வங்கியில் இருந்து இவருடைய வீட்டை ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் வந்து கொண்டே இருந்தது. இதனால், பூங்குஞ்சு மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

பணத்திற்கு என்ன செய்வது என்று அவர் தெரியாமல் விழித்துக் கொண்டு மனம் உடைந்து காணப்பட்டு இருக்கிறார். இத்தகைய நிலையில், அவருக்கு லாட்டரி மூலம் 70 லட்சம் பரிசு விழுந்துள்ளது.

இதனால் அவர் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். அதை வங்கியில் சென்று தனக்கு விழுந்த பரிசு தொகையை பூங்குஞ்சு பெற்றுக்கொண்டு, தான் அந்த வங்கியில் பெற்றிருந்த கடனையும் திருப்பி செலுத்தியுள்ளார். அடுத்ததாக ஏதேனும் சிறு தொழில் துவங்க திட்டமிட்டு இருப்பதாக பூங்குஞ்சு செய்தியாள்களிடம் கூறியுள்ளார்.

Baskar

Next Post

நயன்தாரா கைதாக வாய்ப்பு.? சென்னை காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்.!

Sat Oct 15 , 2022
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது திருமணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகின்றது. கடந்த வாரம் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இதை கவனித்த நெட்டிசன்கள் எப்படி பிறந்தது என்ற கேள்வி எழுப்ப ஆரம்பித்த நிலையில், அவர்கள் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் […]
விக்கி-நயன் குழந்தை விவகாரம்..!! விதிகளை மீறிய மருத்துவமனை..!! வெளியாகிறது அறிக்கை..!! பாய்கிறது நடவடிக்கை..!!

You May Like