fbpx

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு..! ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை தீவிர விசாரணை..!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் குணசேகரனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் 3-வது நாளாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று மதுரையைச் சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

Cops get more time to probe Kodanad case- The New Indian Express

இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை இன்று விசாரணை நடத்தி வருகிறது. மன்னார்குடி சேரம்குளத்தைச் சேர்ந்த குணசேகரனை கோவையில் வைத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்த குணசேகரனிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குணசேகரன் அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர் அலுவலகத்துக்காக டிராவல்ஸிலும் கார் ஓட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

வேகமாக பரவும் காலரா நோய்.. 5 பேர் பலி.. 181 பேர் பாதிப்பு..

Thu Jul 14 , 2022
மகாராஷ்டிராவில் காலரா நோய் பாதிப்பு காரணமாக 5 பேர் உயிரிழந்தனர்.. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது.. கடந்த 7ம் தேதி அமராவதி மாவட்டத்தில் உள்ள சிக்கல்தாரா மற்றும் அமராவதி தொகுதிகளில் காலரா நோய் பரவியது. சிக்கல்தாரா தொகுதியில் உள்ள மூன்று கிராமங்களிலும் (டோங்ரி, கொய்லாரி மற்றும் கானா) அமராவதி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்திலும் (நயா அகோலா) காலரா பரவி உள்ளது.. இந்நிலையில் […]

You May Like