fbpx

ஐந்தாம் நாளாக அதே இடத்தில் “அரிசிக்கொம்பன்”

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை அடுத்த சண்முகா நதி அணை மற்றும்
சுற்றுப்புற வனப்பகுதியில் ஐந்தாம் நாளாக அரிசிக்கொம்பன் முகாம் நேற்று இரவு 7 கிலோமீட்டர் அடர்ந்த வனத்திற்குள் சென்ற அரிசிக்கொம்பன் இன்று காலை மீண்டும் சண்முகா நதி அணைப்பகுதிக்கு திரும்பியது காலை 7 மணிக்கு சண்முகா நதி நீர் தேக்க பகுதியில் தண்ணீர் குடித்துச் சென்றது அரிசிக் கொம்பன் திடகாத்திரமான உடல் நிலையோடு புது தெம்புடன் அரிசிக்கொம்பன் உள்ளதாக வனத்தில் முகாமிட்டிருக்கும் மருத்துவக் குழுவினர் தகவல்.


சண்முகா நதி அணையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்திற்குள் அரிசி கொம்பன் முகாமிட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் வசதியான இடம் அது இல்லை வனத்தில் இருந்து விலகி சமதளமான இடம் கிடைக்கும் வரை காத்திருக்கின்றனர் வனத்துறை மற்றும் மருத்துவக் குழுவினர். எரசக்கநாயக்கனூர் சின்ன ஓவலாபுரம் பகுதிகளில் அரிசிக்கொம்பன் உலா வந்ததாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் பாதுகாப்பு மட்டுமே போடப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளதாகவும் இதற்காக ரேடியோ காலர் சிக்னல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வன உயிரியல் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் தகவல்.

Maha

Next Post

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிலவரம் என்ன தெரியுமா?

Fri Jun 2 , 2023
முதலமைச்சரின் உலக தரத்திலான திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பாக பணியாற்றிய 150 ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருது மற்றும் 100% தேர்ச்சி பெற செய்த 1700 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும், சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளையும் வழங்கினார். பின்னர் […]
தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..! நாளை குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை..!

You May Like