தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவரஞ்சுழி எம் ஜி ஆர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி என்பவரின் மகன் ரஞ்சித்(25). இவர் மற்றும் இவருடைய உறவினர் விஷ்ணு உள்ளிட்ட இருவரும் நேற்று முன்தினம் இரவு திருவலஞ்சுழி கடை தெரு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மகன் சிரஞ்சீவி (23), கணேசன் என்பவரின் மகன் அன்பரசன்( 30), காமராஜ் மற்றும் இவருடைய மகன் தேவராஜ் உள்ளிட்ட நால்வரும் ரஞ்சித், விஷ்ணு உள்ளிட்ட இருவரையும் சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த விஷ்ணு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சித் சுவாமிமலை காவல் நிலையத்தில் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் மற்றும் காவல் துறையினர் சிரஞ்சீவி, தேவராஜ், அன்பரசன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் காமராஜ் திருவலஞ்சுழி திமுக செயலாளராக இருக்கிறார் மேலும் அவரை இந்த வழக்குத் தொடர்பாக காவல்துறை தேடி வருகிறது.