fbpx

இன்று அலுவலகங்களுக்கு லீவு…! வீட்டில் இருந்து தான் வேலை செய்ய வேண்டும்…! இதற்கு மட்டுமே அனுமதி…!

மிக்ஜாம் புயல் நேற்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு – தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து இன்று முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஜெயிலுக்குள் ஐஸ்கிரீம், பானிபூரியா.! அடடே சூப்பரான ஆஃபர்.! வாங்க எங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.!

Mon Dec 4 , 2023
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றங்களின் மூலம் தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவார்கள். தண்டனை காலம் முடியும் வரை அவர்களுக்கு சிறை தான் உலகம். இத்தகைய சிறைச்சாலைகளை தண்டனைக்குரிய இடமாக பார்க்காமல் அவர்களை சீர்திருத்தும் இடமாக பார்க்க வேண்டும் என்று தான் நீதிமன்றங்களும் சட்டங்களும் சொல்கிறது. ஒருவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் அதன் மூலம் அவர் சிறைச்சாலையில் அடைக்கப்படும் போது அவரது வாழ்வை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகவே […]

You May Like