fbpx

10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு…! இதை செய்து முடிக்க 12-ம் தேதி வரை கால அவகாசம்…! அரசு அறிவிப்பு…!

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை இறுதி செய்ய டிசம்பர் 12-ம் தேதி வரையிலும் அவகாசம் அளித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனுப்பி உள்ள கடித்ததில், 2022-23 ம் கல்வியாண்டில் 10,11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க 14-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பெயர் விபரங்களை திருத்தம் செய்ய கால அவகாசம் கேட்டுள்ளனர். எனவே டிசம்பர் 12-ம் தேதி வரையில் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே கடைசி வாய்ப்பாகும். பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் விவரங்களில், தவறு ஏதும் நிகழாமல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மாற்றம்...! TNPSC தேர்வு வரும் 26-ம் தேதி நடைபெறும்...! தேர்வாணையம் புதிய அறிவிப்பு..!

Thu Dec 1 , 2022
சிறை அலுவலர் பணித் தேர்வு வரும் வரும் 26-ம் தேதி தமிழகத்தில் 24 மையங்களில் நடைபெற உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சிறை அலுவலர் பணியில் ஆண்கள் 6 பேரும், சிறை அலுவலர் பணியில் பெண்கள் 2 பேரும் நியமிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது தமிழகத்தில் 7 மையங்களில் கம்ப்யூட்டர் […]

You May Like