fbpx

திரையுலகத்தில் மற்றொரு அதிர்ச்சி.. பிரபல பாடலாசிரியர் மகள் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன…?

பிரபல பாடலாசிரியரான கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தனது வீட்டில் நேற்று இரவு 8 மணி அளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர், எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். பீயிங் உமன் என்ற இதழையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று மாலை சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி மார்கெட் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடலாசிரியர் கபிலன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார், மேலும் ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு பாடல்களை எழுதியதன் மூலம் திரையுலகில் பெரிய பெயர்களில் ஒருவராக இருந்தார். புதுச்சேரியை சேர்ந்த பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்எம்டிஏ காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவரது மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தூரிகையின் மறைவு கப்லியன் மற்றும் அவரது நண்பர்களுக்கு தனிப்பட்ட ஒரு பெரிய இழப்பாகும்.

Vignesh

Next Post

அலர்ட்... வரும் 13-ம் தேதி வரை... தென் தமிழகத்தில் பிச்சி ஒதர போகும் கனமழை...! வானிலை மையம் அப்டேட்...

Sat Sep 10 , 2022
தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளில்‌ நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களிலும்‌, தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை […]
அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!! இந்த தேதிகளில் கன்ஃபார்ம்..!! மக்களே தயாரா இருங்க..!!

You May Like