பிரபல மலையாள எழுத்தாளர் எஸ் ஜெயேஷ் தனது 39வது வயதில் காலமானார்.
கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள எழுத்தாளர் எஸ் ஜெயேஷ் தனது 39வது வயதில் காலமானார். நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலமானார். சமிபத்தில் தலையில் காயம் அடைந்த ஜெயேஷ், மருத்துவமனையில் ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு பாலக்காடு தேங்குறிச்சி அருகே உள்ள அவரது சொந்த ஊரான விளையனூரில் நடைபெற உள்ளது. அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர் .