ஆந்திர பிரதேசத்தின் எலுருவில் சென்ற 2010 ஆம் வருடம் ஒரு பெண் தன்னுடைய முதல் கணவர் உயிரிழந்த பிறகு வேறொரு நபரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அந்த பெண்ணின் குடும்பம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தது என்றும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. அதாவது தன்னுடைய மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் மீது அந்த பெண்ணின் 2வது கணவர் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
முதல் பெண்ணுக்கு 17 வயது எனவும், இளைய மகளுக்கு 16 வயது என்றும் சொல்லப்படுகிறது. அதோடு தன்னுடைய 17 வயது வளர்ப்பு மகளை கர்ப்பம் ஆக்கி இருக்கிறார். அந்த கொடூர தந்தை அதோடு 2வது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது, இது தொடர்பாக காவல்துறையில் புகார் வழங்கியதால் சம்பந்தப்பட்ட பெண்ணையும், அவருடைய கணவரையும் காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.
சிறுமி வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதமாக போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.