தற்போதைய இளைஞர்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பல பெண்களுடன் திருமணத்தை தாண்டிய உறவை வைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.
ஏகப்பத்தினி விரதன் என்ற பழமொழி எல்லாம் ராமர் காலத்தோடு முடிவடைந்து விட்டது. தற்போது கட்டிய மனைவி ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு தட்டிவிட்டால் வேறு ஒரு பெண்ணை சர்வ சாதாரணமாக தேடி சென்று விடுகிறார்கள்.
அப்படி ஒரு சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சரண், மாதவி இருவரும் கடந்த 2015 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சரணுக்கு விசாகப்பட்டினத்தை சார்ந்த வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஆனால் நாளடைவில் அவர்களுடைய பழக்கம் கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் சரண் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தார். ஆனால் இதற்கு தன்னுடைய மனைவி சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்பதை அறிந்து சரண் தன்னுடைய கர்ப்பமாக இருந்த மனைவிடம் நமக்கு பெண் குழந்தை தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய சகோதரர்களுக்கு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
நம்முடைய கடைசி காலத்தில் நமக்கு ஈமச்சடங்குகளை செய்வதற்கு ஆண் குழந்தை வேண்டும் அல்லவா? அதனால் எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவரிடம் உன்னை கூட்டிச் செல்கின்றேன். அவர் வழங்கும் மருந்துகளை நீ சாப்பிட்டு வந்தால் நமக்கு நிச்சயமாக ஆண் வாரிசு பிறக்கும் என்று தெரிவித்து ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு மாதவியின் உடல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆகவே தன்னுடைய கணவன் தன்னிடம் பொய்யாக ஒரு விஷயத்தை சொல்லி எச்ஐவி ஊசியை போட்டு விட்டதாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் மாதவி புகார் மனு ஒன்றை வழங்கினார். இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்ததாவது, கடந்த 2015 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது. திருமணத்தின்போது பெண் வீட்டார் 20 லட்சம் பணம் மற்றும் நிலத்தை வரதட்சணையாக கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள் காவல்துறையினர்.
மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு கூடுதலாக பணம் வேண்டும் என தன்னுடைய மாமனார் வீட்டாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்களால் அதனை கொடுக்க முடியாத நிலையில், சென்ற வருடம் சரணுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தன்னுடைய மனைவி மாதவிக்கு ஹச் ஐ வி ஊசியை போட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.