சென்னை மாநகர பகுதியில் உள்ள கிண்டி மற்றும் வேளச்சேரி செக்போஸ்ட் பேருந்து நிறுத்த பகுதியில் நரிக்குறவர் கார்த்திக் குமார்மற்றும் மனைவி, குழந்தை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவில் வழக்கம் போல் குடும்பத்துடன் பேருந்து நிறுத்ததில் உறங்கிய நிலையில் காலையில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த ஏதோ ஒரு பயனியால் கழுத்து அறுபட்ட நிலையில் கார்த்திக் உயிரிழந்துள்ளார்.
இதனை கண்ட கார்த்திக் குமாரின் குடும்பத்தினர் இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ வந்த கிண்டி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த கார்த்திக்கின் மனைவியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணையும் செய்து வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து, பல கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரனை செய்து வருகின்றனர்.