fbpx

பெரும் அதிர்ச்சி.‌‌. பள்ளி சென்ற 5 வயது சிறுமி..! பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆசிரியர்…!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதர்சாவில் படிக்கும் 5 வயது சிறுமியை மௌலவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கங்கா காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மௌலவி அப்துல் ரஹீமைக் கைது செய்தனர். மாவட்டத்தில் உள்ள சுக்லா கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள பாகராசியை சேர்ந்த மௌலவி அப்துல் ரஹீம், கங்கா காட் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ஜாமியா ரஹ்மத் என்ற மதரஸாவில் கற்பித்து வருகிறார். இந்த மதரஸாவில் படித்து வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. வீடு திரும்பிய அவர், தனக்கு நேர்ந்த கொடுமையை குடும்பத்தினரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதுகுறித்து கங்கா காட் காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தன் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Vignesh

Next Post

தைராய்டு மாத்திரை எடுத்துக்கொள்பவரா நீங்கள்? திடீரென நிறுத்தினால் என்ன ஆகும்?

Sun Oct 23 , 2022
தைராய்டை சரி செய்ய எடுத்துக் கொள்ளும் மாத்திரையை நீங்கள் திடீரென எடுத்துக்கொள்ளாமல் சரி செய்யும் போது என்னவாகும் என்பதை பார்க்கலாம். எடை குறைவு அல்லது எடை அதிகரிப்பு, ரத்த சோகை, தூக்கமின்மை, அடிக்கடி எரிச்சலான மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை தைராய்டு குறைபாட்டால் உண்டாகும் பிரச்சினைகள் ஆகும். தைராய்டு ஹார்மோன் அளவுகளை சீராக வைத்திருப்பதற்கு அதற்கான மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம். […]

You May Like