fbpx

மாதந்தோறும் வருமானம்..!! எஸ்பிஐ வங்கியின் அசத்தல் திட்டம்..!! வாடிக்கையாளர்களே உடனே இதை செய்யுங்க..!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, வேலை அல்லது தொழில் செய்வோர் என இரு தரப்பினருக்காகவும் எஸ்பிஐ வங்கி ஒரு அட்டகாசமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, எஸ்பிஐ வங்கி மாத வருமானம் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் எஸ்பிஐ ஆண்டுத் தொகை டெபாசிட் திட்டம் ஆகும். இதில் முதலீட்டாளர்களுக்கு உத்திரவாதத்துடன் வருமானமும் கிடைக்க வழிவகை செய்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் ஒரு பெரிய தொகையை மொத்தமாக செலுத்தி விட்ட பிறகு பயனாளிக்கு மாதந்தோறும் தவணைத் தொகையை எஸ்பிஐ வங்கி செலுத்தும். அதில், அசல் மற்றும் வட்டி என இரண்டும் கலந்திருக்கும். இதனால் முதலீட்டாளர்களின் அசல் தொகை குறைந்து கொண்டே வரும். இந்த திட்டத்தில் 3, 5, 7 மற்றும் 10 ஆண்டுகள் என பல்வேறு கால வரம்புகளுக்கு முதலீடு செய்து பயன்பெறலாம். இதில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி கிளையை அணுகி, முழு விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Chella

Next Post

அடடே..!! இது நல்ல ஐடியாவா இருக்கே..!! பணத்தை இப்படியும் சேமிக்கலாமா..?

Sat Jan 28 , 2023
பெயரை தவறாக உச்சரிப்பதோ, தவறாக கூப்பிடுவதையோ யாரும் விரும்ப மாட்டார்கள். பலருக்கு இப்படி தங்களது பெயரை தவறாக கூப்பிடுவோர் மீது கடுகடுக்கவும் செய்வார்கள். அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜூலியா க்ரீன் (28) என்ற பெண், இதேபோல தனது பெயரை தவறாக உச்சரிப்பவர்களால் ரொம்பவே கடுப்பாகியிருக்கிறார். ஆனால், அப்படி கடுப்பாவதால் மட்டும் எந்த பயனும் இல்லை என யோசித்து, எப்போதெல்லாம் பெயரை தவறாக சொல்கிறார்களோ அப்போதெல்லாம் 1 பவுண்ட் காசை […]

You May Like