புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஸ்டார்ட் அப் மூலம் தனியார் முதலீடுகளை அதிகரிக்கவுமான ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியது.
2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டுக்கான துறை, அங்கீகரிக்கும் அறிவிக்கையை வெளியிட்டது. 2016-ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் இந்தியா தொடங்கப்பட்டதிலிருந்து 2023 பிப்ரவரி 28-ம் தேதி வரை இந்தத் துறை 92,683 நிறுவனங்களை அங்கீகரித்துள்ளது.