fbpx

”குடிகார மகனுக்கு புத்திமதி சொன்ன தாய்”..!! கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு மீண்டும் குடித்த மகன்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வானீஸ்வரி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், மூத்த மகனான ராஜேஷ் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் தினேஷ் காவல்துறையில் பணியில் சேர்ந்து அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர பணிக்கு செல்லாத காரணத்தினால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தினேஷுக்கு  திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் குடிபோதையில் தனது மனைவியை கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதன் பின்னர் அவரது மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தினேஷ் அதிக அளவில் மதுகுடித்துவிட்டு தனது தாய் வானீஷ்வரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளர். பின்னர் குடிபோதையில் இருந்த தன் மகனுக்கு வானீஸ்வரி அறிவுரை கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தினேஷ், தனது தாயை இரவு முழுவதும் கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

தன் தாய் இறந்து விட்டார் என்று அறிந்ததும் கதவை பூட்டி வைத்து காலை முதலே தினேஷ் வீட்டின் அருகாமையில் அமர்ந்து குடித்து வந்துள்ளார். இந்நிலையில் வானீஸ்ரியும் அவரது மகளான பிரியாவும் நாள்தோறும் இரவு நேரத்தில் செல்போனில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வழக்கம்போல் நேற்று ப்ரியா தன் தாய்க்கு செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், செல்போனை எடுக்காத காரணத்தினால் சந்தேகமடைந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் விடாமல் தினேஷ் தடுத்துள்ளார். பிறகு அவரை மீறி வீட்டிற்குள் சென்ற ப்ரியா அவரது தாய் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு கத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சத்தம் கேட்டு அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த தினேஷ் தப்பித்து ஓடி உள்ளார். போலீசிடம் நடந்த சம்பவம் குறித்து பிரியா தெரிவித்ததைத் தொடர்ந்து தப்பித்து ஓடிய தினேஷை காவல்துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

இளம் பெண்ணின் முகத்தை மார்பிங் செய்த செய்த இளைஞர் அதிரடி கைது……! சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை கோவையில் பரபரப்பு……!

Thu Mar 16 , 2023
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் முகம் மார்பிங் செய்யப்பட்டு, தவறாக சித்தரிக்கப்பட்டு அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து whatsapp மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரி […]
மாடல் அழகியை தனது ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி..!! விடிய விடிய சுற்றித்திரிந்த கார்..!! மீண்டும் அதிர்ச்சி

You May Like