fbpx

மருமகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த மாமியார்…..! மத்திய பிரதேசத்தில் கொடூர செயல்…..!

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் விதிஷா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சுகி செவானியா கிராமத்தில் வசிக்கும் இளைஞருடன் திருமணம் நடந்தது. பெண்ணின் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றின் வேலை பார்த்து வருகிறார்.

திருமணமாகி சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு கணவர் அந்த பெண்ணை சித்திரவதை செய்ய தொடங்கினார். ஆகவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பலமுறை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சமாதானம் செய்து வைக்கும் விதத்தில் பேசியும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

நாள்தோறும் பிரச்சனையின் காரணமாக, விரக்தி அடைந்த அந்தப் பெண் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கணவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் தன்னுடைய மனைவியை காணவில்லை என்று கணவர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.

மனைவி அவருடைய தாய் வீட்டில் இருப்பதை அறிந்து கொண்ட மாமியாரும், மைத்துனரும் அந்த பெண்ணிடம் சென்று சமாதானமாக பேசியிருக்கின்றனர். கணவருடன் இனி சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்கும் விதத்தில், நாங்கள் நடந்த போகிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதை நம்பி அந்த பெண்ணும் மாமியார் மற்றும் மைத்துனருடன் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால் அந்த பெண் வீட்டிற்கு வந்தவுடன் கணவர்,மாமியார், மைத்துனர் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து, அந்த பெண்ணை ஒரு நாள் முழுவதும் அரை ஒன்றில் அடைத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. அதோடு அவரை சித்திரவதை செய்த அந்த மூவரும், அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி சூடான இரும்பு கம்பியால் அந்த பெண்ணின் உடல் உறுப்பு மற்றும் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்திருக்கிறார்கள்.
அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஒன்றுகூடி அறையை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தொடர்ந்து காவல்துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கணவர், மாமியார் மற்றும் மைத்துனர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து துன்புறுத்தல் வரதட்சணை கொடுமை மற்றும் பிற பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்

Next Post

இன்னும் 2 நாட்களில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Thu May 25 , 2023
அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு […]

You May Like