கூடலூர் நகராட்சி மன்றத்தில் நகராட்சி மன்ற தலைவி வார்டு கவுன்சிலர் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கூடலூர் நகராட்சி மன்ற கூட்டத்தின் போது நகராட்சி மன்ற தலைவருக்கும் கவுன்சிலருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக நகராட்சி மன்ற தலைவி பரிமளா 7வது வார்டு கவுன்சிலர் சத்தியசீலன் என்பவரை தாக்க முயன்ற சம்பவம் நகர்மன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக 50000 ரூபாய் லஞ்சம் வாங்கியது தொடர்பான காரசாரமான விவாதத்தின் போது நகராட்சி மன்ற தலைவி மற்றும் கவுன்சிலரிடையே கடும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிய பார்த்தது. பதினொன்றாவது வார்டு திமுக கவுன்சிலரான சத்தியசீலன் என்பவருக்கும் நகர்மன்ற தலைவி பரிமளாவிற்கும் இடையேயான வாக்குவாதத்தில் இருவரையும் சமரசம் செய்வதற்காக கூடலூர் திமுக நகரச் செயலாளர் இளஞ்செழியன் முயற்சி செய்தார். ஆனாலும் அவரால் இருவரையும் சமரசம் செய்ய முடியவில்லை. இந்நிலையில் நகராட்சி மன்ற தலைவி பரிமளா சத்தியசீலனை கன்னத்தில் தாக்க முற்பட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.