fbpx

“உங்களது மதிப்புமிக்க அறிவுரைக்கு நன்றி” – தோனி குறித்து உருக்கமாக பதிவிட்ட முஸ்தபிசுர் ரஹ்மான்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளராக விளையாடி வந்த முஸ்தபிசுர் ரஹ்மான் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் நெகிழ்ச்சியான கருத்துக்களை தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும்  ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ ஆகிய அணிகள் தற்போதைய நிலையில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. சென்னை, டெல்லி, பஞ்சாப், குஜராத் அணிகளும் பிளே ஆப் ரேஸில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பல அணிகள் 10 லீக் போட்டிகளை விளையாடிவிட்டாலும் சில அணிகள் 9 போட்டிகளிலேயே விளையாடி உள்ளது. டெல்லி அணி மட்டும் 11 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இதில் மும்பை, பெங்களூரு அணிகள் மட்டும் முறையே 9வது, 10வது இடங்களில் உள்ளன. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் நோக்கி தங்களின் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தாலும் வீரர்கள் காயமும், வீரர்களின் வெளியேற்றமும் பெரிய தலைவலியை அணிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்நிலையில், சிஎஸ்கே அணி சமீபத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் வங்கதேசம் – ஜிம்பாப்வே இடையிலான டி20 தொடரை விளையாட இருப்பதால் அவர் சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறுகிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியே அவர் விளையாடிய கடைசி போட்டியாகும்.

முஸ்தபிசுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “எல்லாவற்றிற்கும் நன்றி மஹி அண்ணா. உங்களைப் போன்ற ஜாம்பவான்களுடன் விளையாடியது ஒரு சிறப்பு உணர்வாக இருந்தது. ஒவ்வொரு முறையும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. உங்கள் மதிப்புமிக்க அறிவுரைகளுக்கு நன்றி. நான் அந்த விஷயங்களை நினைவில் கொள்கிறேன். விரைவில் உங்களுடன் மீண்டும் சந்தித்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Next Post

சிக்கன் ரைஸில் விஷம்: தாத்தாவை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழப்பு..! நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

Fri May 3 , 2024
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது தாய் நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்தவர் பகவதி. பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவர், நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதில் இரண்டை தனது தம்பி ஆதி (18) என்பவர் மூலம் தனது தாத்தா சண்முகநாதன் (72) வசிக்கும் எருமைப்பட்டி அருகே உள்ள […]

You May Like