fbpx

கதவை மூடாமல் லிப்டில் பயணித்த தூய்மை பணியாளர்……! ஒரு நொடியில் நிகழ்ந்த விபரீதம் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்…..!

சென்னை மயிலாப்பூர் பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்று இருக்கிறது. இந்த ஹோட்டலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் பெரம்பூர் கூக்ஸ் சாலை ஹைதர் கார்டன் பிரதான தெருவை சேர்ந்த அபிஷேக்(28).

இவர் நேற்று மதியம் பொருட்களை எடுத்து செல்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த லிப்ட்டில் ட்ராலியின் பொருட்களை எடுத்துக்கொண்டு 11வது மாறி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய கவன குறைவால் 2 மாடிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ளார் உடனடியாக இது தொடர்பாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதன் பேரில் எழும்பூர் மயிலாப்பூர் பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் 2️ மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அபிஷேக்கை பிணமாக மீட்டனர். மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு இந்த விபத்து தொடர்பாக ராயப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போது, கதவு மூடப்படாமல் இருந்ததாலேயே அபிஷேக் தவறி விழுந்து நசுங்கி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

Next Post

தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான புதிய உத்தரவு….! இது நல்லா இருக்கே…..!

Mon Jun 26 , 2023
தமிழ்நாட்டில் ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்கு துறையின் தரவு தளத்திலிருந்து ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் எல்லாம் எடுக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய நிலையில் தான் […]
மூத்த குடிமக்களுக்கு அதிரடி சலுகைகள்..!! மாதம் ரூ.500..!! உடனே இந்த எண்ணுக்கு ஃபோன் பண்ணுங்க..!!

You May Like