fbpx

அதிர்ச்சி…! போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கும் திட்டம் நிறுத்தம்…! மத்திய அரசு தகவல்..‌.!

சீக்கிய, ஜெயின், முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த மற்றும் பார்சி ஆகிய ஆறு அறிவிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகளில் சேருவதற்கான தகுதித் தேர்வுகளை எழுதவும் குரூப் ஏ, ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவுகளில் போட்டித் தேர்வுகளை எழுதவும் சிறப்பு பயிற்சி மூலம் உதவுவதற்காக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ‘நயா சவேரா’ திட்டத்தை (‘இலவச பயிற்சி மற்றும் தொடர்புடைய’ திட்டம்) மத்திய அரசு செயல்படுத்தி வந்தது.

இத்திட்டம் நாடு முழுவதும் திட்ட அமலாக்க முகமைகள் மூலம் செயல்படுத்தப்பட்டது. நயா சவேரா திட்டத்தின் கீழ் 1,19,223 சிறுபான்மை மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த சிறுபான்மையினரின் மாநில வாரியான விவரங்கள் www.minorityaffairs.gov.in அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் பயிற்சிக் காலம் 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சித் திட்டத்தைப் பொறுத்து இருந்தது. இத்திட்டம் 2022-23 நிதி ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Vignesh

Next Post

நாடு முழுவதும் 10.1 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு...! 2023-ம் ஆண்டிற்கான புள்ளி விவரம்...!

Sun Aug 6 , 2023
2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் – இந்திய நீரிழிவு ஆய்வின்படி, நீரிழிவு நோயின் பாதிப்பு 10.1 கோடி ஆகும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பொதுவான புற்றுநோய்கள் போன்ற பொதுவான தொற்றா நோய்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் பரிசோதிப்பதற்கான மக்கள்தொகை அடிப்படையிலான முன்முயற்சி தேசிய சுகாதார இயக்கத்தின் கீழும், விரிவான ஆரம்ப சுகாதார பராமரிப்பின் ஒரு பகுதியாகவும் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் […]

You May Like