திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் சுந்தர்ராஜபுரம் பகுதியைச் சார்ந்தவர் 29 வயது இளைஞரான யுவராஜ் இவருக்கு திருமணம் ஆகி காயத்ரி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது . இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் . இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இவரது பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த யுவராஜின் கழுத்து பகுதிகளில் நகக்கிரல்களும் காயங்களும் காணப்பட்டுள்ளது. இது காவல்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் யுவராஜின் தந்தை தனது மகன் கொலை செய்யப்பட்டிருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் அதனால் தனது மருமகள் காயத்ரியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் அவரது மனைவியிடம் யுவராஜன் இறப்பு பற்றி தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.