fbpx

திருவள்ளூர் அருகே கழுத்தில் நகக்கீரல்களுடன் மர்மமான முறையில் இளைஞர் மரணம் – மனைவியிடம் காவல்துறை தீவிர விசாரணை!

திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் சுந்தர்ராஜபுரம் பகுதியைச் சார்ந்தவர் 29 வயது இளைஞரான யுவராஜ் இவருக்கு திருமணம் ஆகி காயத்ரி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது . இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் . இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இவரது பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த யுவராஜின் கழுத்து பகுதிகளில் நகக்கிரல்களும் காயங்களும் காணப்பட்டுள்ளது. இது காவல்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் யுவராஜின் தந்தை தனது மகன் கொலை செய்யப்பட்டிருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் அதனால் தனது மருமகள் காயத்ரியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் அவரது மனைவியிடம் யுவராஜன் இறப்பு பற்றி தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Baskar

Next Post

'ஃபார்ஸி' ஸ்டைலில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டு - ஹைதராபாத்தை கலக்கிய கள்ள நோட்டு கும்பல் கைது!

Tue Feb 21 , 2023
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகும் கள்ள நோட்டு அச்சடித்தல் மற்றும் புழக்கம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் கள்ள நோட்டு அச்சடித்தது தொடர்பாக ஒரு பெண் மற்றும் ஆண் ஆகிய இரண்டு பேரை ஹைதராபாத் நகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் பழைய நகர் அருகே உள்ள சந்திரயாங்குட்டா என்ற இடத்தில் கள்ள நோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விடப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் […]

You May Like